Support Dharma Flourish Everywhere

www.dharmabharat.org

Tulasi-Omam Herbal Kudineer

₹751.00

 "எனக்கு அஷ்டோபசார பூஜையோ, ஷோடோபாசார பூஜையோ வேண்டா;  எங்கு பாவம் (BHAvam) இருக்கிறதோ,  அங்கு நான் இருக்கின்றேன்." - ஸ்ரீ ஸாயீராமாயணம்

என ஷீரடி ஸாயீபாபாவின் வாக்கிற்கிணங்க,  கோடி பாபா ஆலயத்தில்,  பாபாவிற்கு பூ சாற்றப்படுவது இல்லை.  அதற்கு பதிலாக,  வியாழன்,  சனிக்கிழமை மற்றும் விசேஷ தினங்களில், பாபா மற்றும் மூர்த்திகளுக்கு துளசி தளம் மற்றும் மாலை சாற்றப்படுகிறது.

எந்த இடத்தில் துளசிச் செடி வளர்ந்திருக்கிறதோ அங்கே மும்மூர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள்.   துளசியின் காற்றுப் பட்டாலே பாவங்களும் ரோகங்களும் விலகி விடும்.  துளசி இலையைத் தெய்வப் பிரசாதமாக உண்பவர்க்கு சகல பாவங்களும் தொலையும்.

பாபாவிற்கு துளசி தளம் - மாலை சாற்றுவதால் ஏற்படும் பலன்கள்:

  • வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் சொந்த வீடு வாங்கும் பாக்கியம் கிட்டும்.

  • வாடகை வீட்டில் வசிப்பவர்கள், தாங்கள் வசிக்கும் வீட்டை, வீட்டின் உரிமையாளர் விற்க முற்படும்பொழுது,  அதனை வாங்கும் பாக்கியம் கிட்டும்.

  • வேலை நிமித்தமாக அடிக்கடி இடமாற்றம் ஏற்படுபவர்கள்,  ஒரே இடத்தில் வசிப்பதற்கு வழிவகுக்கும்.

  • கணவன்-மனைவி பிரிந்து வெவ்வேறு இடங்களில் வேலை பார்ப்போர் ஒன்று சேர வழிவகுக்கும்.

பொங்கும் தர்மம் எங்கும் ஓங்குக !